"சேர்ந்து வாழு இல்லன்னா, உயிரை விடு" நடுரோட்டில் கணவனின் வெறிச்செயல்..



Husband killed his wife at public

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கும் , விஜயலட்சுமி என்பவருக்கும் 10ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

Crime

இந்நிலையில், ராமுவின் குடிப்பழக்கம் காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, விஜயலட்சுமி  வத்தலகுண்டுவில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதன்படி, விஜயலட்சுமியும் அவரது தாயாரும் கடைக்கு சென்றுவிட்டு காந்திநகர் பகுதியில் நடந்து வரும்பொழுது , தன்னுடன் வாழ வரும்படி விஜயலட்சுமியை அவரது கணவரான ராமு  அழைத்தாகத் தெரிகிறது.

Crime

ஆனால் விஜயலட்சுமியோ, "இனிமேல் குடிக்காமல் ஒழுங்காக வேலைக்குச் சென்றால் மட்டுமே தான் வரமுடியும்" என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுனியின் கழுத்தை அறுத்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் விஜயலட்சுமியை  மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ராமுவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.