மனைவி உயிரிழந்ததால், மகனை கொன்று கணவன் செய்த காரியம்.! கதவை திறந்துபார்த்த காவலாளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
மனைவி உயிரிழந்ததால், மகனை கொன்று கணவன் செய்த காரியம்.! கதவை திறந்துபார்த்த காவலாளிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
மதுரையில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். 42 வயது நிறைந்த இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் ஓட்டல் அதிபரின் மகள் பாரதி என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களது திருமணத்திற்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கார்த்திகேயன் தனது மனைவி பாரதியுடன் வாடகைக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.
இவர்களுக்கு சபா என்ற 13 வயது மகன் இருந்தார். மேலும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்தநிலையில் அவரை கார்த்திகேயனும், பாரதியும் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் பாரதி வாதநோயால் பெரும் அவதிபட்டு வந்தார். மேலும் சில காலங்களில் அவரது கண்பார்வையும் மங்கியது.
இந்தநிலையில் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த தனது மகனையும், நோயாளியான மனைவியையும் மிகவும் சிரமப்பட்டு கார்த்திகேயன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டு காவலாளி ஆசைத்தம்பி என்பவர் குடியிருப்பு பாராமரிப்பு கட்டணம் வசூலிக்க கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீண்டநேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கார்த்திகேயன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி இருந்துள்ளார். மேலும் பாரதியும், சபாவும் படுக்கையில் பிணமாக கிடந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆசைத்தம்பி இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு ஆராய்ந்தபோது அங்கு கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது.
அதில், எனது மனைவி காலை 3 மணிக்கு உடல்நிலை மோசமாகி இறந்துவிட்டார். அவள் இல்லாத வாழ்க்கையை வாழ எனக்கு பிடிக்கவில்லை. எனது மகனும் மாற்றுத்திறனாளி அவனை கவனிக்கவும் யாருமில்லை, எனவே எனது மகனும் நானும் சாகப்போகிறோம். எனது பணம் மற்றும் சொத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கிவிடுங்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.