கணவன்-மனைவி சண்டையை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்!

கணவன்-மனைவி சண்டையை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்!



Husband and wife fight unknown person death

பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறு விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாய இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் நிலம் விற்றதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் அதே போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

Covai

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சிவகுமார் என்பவர் கணவன் மனைவி சண்டையை நிறுத்தி சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது சிவகுமாரை, ராதாகிருஷ்ணன் தாக்க முயன்றுள்ளார். இதனால் இவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், ராதாகிருஷ்ணனை அங்கிருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Covai

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஆனைமலை போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவப்புமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.