அடக்கொடுமையே! நண்பருடன் புத்தாண்டை கொண்டாட சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.!

அடக்கொடுமையே! நண்பருடன் புத்தாண்டை கொண்டாட சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.!



Humility! Tragedy befell a college student who went to celebrate New Year with a friend.

குலசேகரம் அருகே இட்டகவேலி பூஞ்சிபிலாவிளையை சேர்ந்தவர் கணேசன் மகன் அனீஷ். இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்ததுடன் விடுமுறை நாட்களில் கட்டிட வேலைக்கு சென்றும் வந்துள்ளார்.

இந்நிலையில் அனீஷ் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தனது நண்பன் தீபு என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பேச்சிப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குலசேகரம் அருகிலுள்ள தும்பகோடு பேருந்து நிலையம் பகுதியில் செல்லும்போது தீடிரென அனீஷின் கட்டுப்பாட்டை இழந்த அவரது இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். 

accident

பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்து தீபுவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து குலசேகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.