செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களா நீங்க.! பெட் லைசென்ஸ் பெறுவது எப்படி?? உங்கள் கவனத்திற்கு..



how-to-get-pet-licence-instruction-released

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் 

சென்னையில் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அதற்கான உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் இணைய வழியில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது குறித்த வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
 உரிமம் பெறும் வழிமுறைகள் 

சென்னை மாநகராட்சியின் இணையதளமான www.chennaicorporation.gov.in சென்று 'இணையதள சேவைகள் (Online Services) என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் 
அதில் உள்ள பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் (Pet Animal License) என்பதை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். தொடர்ந்து அதில் வரும் புதிய பயனர் அதாவது New user என்பதனை தேர்வு செய்து உள்ளே சென்று தங்களது விவரங்கள் மற்றும் 4 இலக்க எண்ணை (pin number) உள்ளீடு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: தேர்வு முடிவை தெரிந்துகொள்ளாமலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்; சென்னையில் சோகம்.!

Pet

பின்னர் தங்களது அலைபேசி எண் மற்றும் நான்கு இலக்க எண்ணை (Pin Number) பயன்படுத்தி உள்நுழைந்து, புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் (New Pet Registration) என்பதை தேர்வு செய்யவும். அதில் தங்களது செல்லப்பிராணிகளின் முழு விவரங்களையும் பதிவு செய்து பின்னர் உரிமையாளரின் புகைப்படம், முகவரி, செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு ஆண்டிற்கான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து பின்னர் உறுதிமொழி அளித்து அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

உரிமம் பெற செலுத்தவேண்டிய தொகை 

இந்த விவரங்களை மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். பின் உரிமையாளர் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் இருக்கும் இணைய முகப்பு (Portal) பக்கத்திற்கு சென்று இணைய வழியில் 50 ரூபாய் பணம் செலுத்தவேண்டும். அதன் பிறகு செல்லப்பிராணிகளின் உரிமம் (Pet Animal License) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (Link) உருவாகும்.அதனை கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை (Pet Animal License) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆகவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உட்பட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது

 

 

இதையும் படிங்க: சென்னை வாகன ஓட்டிகளுக்கு உற்சாக செய்தி; மாநகர் முழுவதும் பசுமைநிற பந்தல்.!