ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த மர்மகும்பல்.. போலீசார் விசாரணை.!

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த மர்மகும்பல்.. போலீசார் விசாரணை.!



Homosex problem in thirupur

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு கடந்தாண்டு திருமணமான நிலையில், அவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ராஜ்குமார் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கை விருப்பமடையவர்களை தேடிய போது, திருப்பூரை சேர்ந்த வேறு ஒரு வாலிபர் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Thirupur

அப்போது அந்த நபர் சொன்ன இடத்திற்கு ராஜ்குமார் சென்றபோது அங்கு அவரை சூழ்ந்து கொண்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜ்குமாரை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து ராஜ்குமார் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 17 வயது சிறுமிகளை குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் தான் ராஜ்குமாரை ஓதினர் சேர்க்கைக்கு அழைத்து வழிப்பறி செய்தது தெரிய வந்தது.