தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தராவது

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தராவது


high-court-ordered-ec-to-submit-civic-polls-schedule

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

tamilnadu election commision

இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுகவும் மனுக்களை தாக்கல் செய்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதுவரை உள்ளாட்சி நிர்வாகிகளை நிர்வாகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கலாம் எனவும் அறிவுறுத்தியது. 

ஆனால், தேர்ல் ஆணையம் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்தவில்லை. இதனால், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

tamilnadu election commision

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6ஆம் தேதி செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

மேலும், உள்ளாட்சி தேர்தல் நடத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்தாதது குறித்து விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.