உஷார்.. 23 மாவட்டங்களில் கொட்டிதீர்க்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

உஷார்.. 23 மாவட்டங்களில் கொட்டிதீர்க்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!



Heavy rainfall alert for tamilnadu

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கன முதல் மிககனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

chennai

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.