அடுத்த 4 நாட்களுக்கு அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

அடுத்த 4 நாட்களுக்கு அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!



Heavy rainfall alert for 4 days

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும். அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி இது நகரும். குமரிகடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

7-ஆம் தேதி மற்றும் 8-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

heavy rainfall

10-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.