எச்சரிக்கை.. அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

எச்சரிக்கை.. அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



Heavy rainfall alert

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 7-ஆம் தேதி மற்றும் 8-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy rainfall alert

தலைநகர் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்து 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 9-ஆம் தேதியை பொறுத்தவரையில் தென்மேற்கு வங்ககடலின் கிழக்குப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.