என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
அண்ணனின் இறப்பு செய்தியை கேட்டு தம்பி மாரடைப்பில் மரணம்.!
அண்ணனின் இறப்பு செய்தியை கேட்டு தம்பி மாரடைப்பில் மரணம்.!
திருப்பத்தூர் மாவட்டம் பூரிக்கமானி மிட்டா ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு நாகராஜ், சேகர், ராஜா என்ற 3 உடன் பிறந்த சகோதரர்கள் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சுப்பிரமணி கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து சுப்பிரமணி உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணியின் இறப்பு செய்தி அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுப்பிரமணியின் இறப்பு செய்தியை கேட்டதும் அவரது சகோதரரான ராஜா அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜா மாரடைப்பு ஏற்பட்டு அன்றே உயிரிழந்துள்ளார். மேலும் அண்ணனின் இறப்பை ஏற்க முடியாத தம்பி மாரடைப்பில் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.