சாத்தான்குளம் விவகாரம்! வாக்குமூலம் கொடுத்த பெண் காவலரைப் பாராட்டிய ஜி.வி.பிரகாஷ்!

சாத்தான்குளம் விவகாரம்! வாக்குமூலம் கொடுத்த பெண் காவலரைப் பாராட்டிய ஜி.வி.பிரகாஷ்!



gv-prakash-appriciate-police

காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சமர்பித்திருக்கும் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை தெரிவிக்கிறது. 

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், தலைமைக்காவலர் ரேவதிக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். உங்களோடு தேசம் துணை நிற்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.