பெரும் சோகம்.. வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவர்.. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணை..!



great-tragedy-the-husband-left-after-saying-he-was-goin

திருச்சி மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் செந்தில் - சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்பது வயதில் மகன் ஒருவர் உள்ளார். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் குவாரியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில் குவாரிக்கு வேலைக்கு செல்வதாக குடும்பத்தாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் குவாரிக்கு சென்ற செந்தில் அங்கிருந்த கிரேன் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Husband sucide

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.