பள்ளி முடிந்து வீடு திரும்பிய 7 வயது சிறுமியை சோளக்காட்டிற்குள் தூக்கி சென்று கூட்டு பாலியலில் ஈடுப்பட்ட காமக் கொடூர இளைஞர்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய 7 வயது சிறுமியை சோளக்காட்டிற்குள் தூக்கி சென்று கூட்டு பாலியலில் ஈடுப்பட்ட காமக் கொடூர இளைஞர்கள்! அதிர்ச்சியூட்டும் தகவல்.



Gang Rape salam

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பள்ளக்காட்டூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாலையில் பள்ளியை முடிந்து சோளக்காட்டு வழியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மூன்று இளைஞர்கள் அந்த குழந்தையை தூக்கி சென்று சோளக்காட்டிற்குள் ஒருவர் பின் ஒருவராக கூட்டு பாலியலில் ஈடுப்பட்டுள்ளனர். அதன் பின் வலியால் துடித்த அந்த குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து இதை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

Gang rap

இதனால் பயந்து போன அந்த குழந்தை வீட்டிற்கு வந்து யாரிடமும் கூறாமல் சோர்வுடன் படுத்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் என்ன குழந்தை இப்படி சோர்வாக இருக்கிறாளே என வந்த குழந்தையை பார்த்த போது குழந்தையின் ஆடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. 

உடனே சிறுமியிடன் கேட்ட போது குழந்தை அனைத்தையும் கூறியுள்ளது. அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சோளக்காட்டிற்குள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.