நிறைமாத கர்ப்பிணி அரசு மருத்துவமனையில் மரணம்: நர்சுகள் மீது உறவினர்கள் சரமாரி குற்றச்சாட்டு..!

நிறைமாத கர்ப்பிணி அரசு மருத்துவமனையில் மரணம்: நர்சுகள் மீது உறவினர்கள் சரமாரி குற்றச்சாட்டு..!


Full-month pregnant woman dies in government hospital: Relatives accuse nurses

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (20). கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பிணியான இவர் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை குழந்தைகளை சுமந்திருந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சிகிச்சை தொடங்கிய சிறுது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் பெண் உயிரிழந்ததாக அவரது கணவர் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், சங்கரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடி மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பணியில் இருந்த செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து சங்கிரியின் கணவன் மதன் கூறுகையில், காலை பிரசவத்திற்காக தனது மனைவியை அனுமதித்த போது பிரசவ அறையில் நுழையும் போதே செவிலியர்கள் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் மருத்துவர்கள் வராத நிலையில், அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் கூறியபடி தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் தனது மனைவி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் கர்ப்பிணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் அவர் உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.