அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடும் அஜித்; தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட வைரல் வீடியோ இதோ.!
சபதத்தை முடித்த திரௌபதி?... திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
சபதத்தை முடித்த திரௌபதி?... திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சமீபத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனால் அவரின் அமைச்சர் பதவி, அதனைதொடர்ந்த எம்.எல்.ஏ பொறுப்பு ஆகிய பதவிகள் அடுத்தடுத்து இழக்கப்பட்டன. இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதியின் எம்.எல்.ஏ பொன்முடி பதவியை இழந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் பூட்டு போடுவதற்கு காரணமாக இருந்த பொன்முடி அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் அதற்கு துணை போன அனைவரின் கதியும் என்னவாகப் போகின்றது என்று பொறுத்திருந்து பாருங்கள்..
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) July 17, 2023
திராவிட மாடல் அரசே திரெளபதி அம்மனிடம் மட்டுமல்ல எந்த தெய்வத்திடமும் உங்கள்… pic.twitter.com/ZwhspEzzY5
முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த திரௌபதி கோவில் ஒன்று மூடப்பட்ட விவகாரத்தில் பொன்முடிக்கு தொடர்பு இருப்பதாக கூறி ஒருதரப்பினர் ஆதங்கம் தெரிவித்து திரௌபதி பதில் சொல்வர் என கூறி வந்தனர்.
இந்நிலையில் தான் பொன்முடிக்கு எதிராக வழக்கு விசாரணை திசைதிருப்பி, அவர் எம்.எல்.ஏ பதவி வரை இழந்து இருக்கிறார். இது திரௌபதி சபதத்தை நிறைவேற்றியதால் மட்டுமே என அத்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
மேல்பாதி #திரௌபதி கோவிலை பண,அதிகார திமிர்ல ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு சொந்தமான குல தெய்வ கோவிலை இழுத்து மூடினாங்க...ஒரு சமூக மக்களே மற்றவருடைய குலதெய்வ விஷயத்தில் தலையிடமாட்டாங்க... சம்மந்தமே இல்லாம இதை சாதிய பிரச்சனயாக்கினவங்க நிலமை இப்ப பரிதாபநிலையில்...#பொன்முடி #DMK pic.twitter.com/DmAw9XWtnz
— போலி_ஊடகம்🤦🤐 (@rajarajan060492) December 21, 2023
சமூக வலைதளபதிவுகளின் அடிப்படையில் செய்தி பதிவிடப்பட்டுள்ளது.