தேர்தலில் தோல்வியடைந்ததால் சாலையை வேலி போட்டு அடைத்த வேட்பாளர்! தத்தளித்த பொதுமக்கள்!

தேர்தலில் தோல்வியடைந்ததால் சாலையை வேலி போட்டு அடைத்த வேட்பாளர்! தத்தளித்த பொதுமக்கள்!



formar panchayat head blocked road


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம், சுக்காம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கமால்மைதீன். இந்தமுறை சுக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டிருந்தார். ஆனால் நடைபெற்ற தேர்தலில் கமால்மைதீன் தோல்வியடைந்தார். 

கமால்மைதீன் இதற்கு முன்பு சுக்காம்பட்டி ஊராட்சியின் தலைவராக இருந்தபோது புதுப்பட்டியில் இருந்து பூசாரிபட்டிக்கு செல்வதற்கு குறுக்குவழி சாலையை தனது பட்டா நிலத்தில் அமைத்து கொடுத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தல் வாக்குறுதியில் அந்த சாலையை மேம்படுத்தி தருவதாகவும் பொதுமக்களிடம் கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் கமால்மைதீன் தோல்வியடைந்ததால் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

road

இந்தநிலையில் தனது பட்டா நிலத்தில் போடப்பட்டு இருந்த சாலையை வேலி போட்டு அடைத்துவிட்டார். இதனால் பூசாரிபட்டிக்கு செல்லும் பொதுமக்கள் கருவார்பட்டி வழியாக சுமார் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் உள்ளது.