செத்து மிதக்கும் மீன்கள்., காவேரி ஆற்றில் வினோதம்.!!

செத்து மிதக்கும் மீன்கள்., காவேரி ஆற்றில் வினோதம்.!!



fishes died in Cauvery river

மேட்டூரில் இருந்து திறந்து விடுகின்ற நீர் லாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் நிலையங்கள் பகுதிகளைக் கடந்து திருச்சி தஞ்சாவூர் வரை செல்கிறது. 

இந்த நிலையில் நேற்று காவேரி நீர் செல்லும் வழியில் காவிரி ஆற்றல் அங்கங்கே மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதே போல் பல இடங்களில் காவேரி நீர் செல்லும் பல இடங்களில் மீன்கள் செத்து மிதந்துள்ளது. 

இதனால் காவேரி ஆற்றல் குளிக்க வருபவர்கள் பயத்தில் திரும்பி செல்கிறார்கள். மேலும் மீன் பிடிக்க தோட்டாக்களை போட்டதால் மீன் செத்து மிதிக்கிறதா? இல்லை கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதா? என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர். 

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் ஆய்வு செய்து கூற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.