ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு.. ஒருவர் வெட்டி படுகொலை.!
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு.. ஒருவர் வெட்டி படுகொலை.!
ராமநாதபுரம் அருகே ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் விவசாயி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் நிறைகுளத்து வள்ளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க அருகில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இதனை பொந்தம்புளி ஊரை சேர்ந்த முத்துராமலிங்கம், முனியசாமி, இதயராஜா ஆகியோர் ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்க்க வந்துள்ளனர். அப்போதே இவர்கள் நிகழ்ச்சியின் போது ஆரவாரம் செய்ததால், பெருநாழி கிராமத்தை சேர்ந்த அஜய் சரவணன் ஓம் பிரகாஷ் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினரும் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் முனியசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.