அதிர்ச்சி!! மாமியாரிடம் தாறுமாறாக நடந்துகொண்ட மருமகன்.! கடுப்பாகி மாமனார் செய்த காரியத்தைபார்த்தீர்களா!!
அதிர்ச்சி!! மாமியாரிடம் தாறுமாறாக நடந்துகொண்ட மருமகன்.! கடுப்பாகி மாமனார் செய்த காரியத்தைபார்த்தீர்களா!!
கோயமுத்தூர் மாவட்டம் இடையர்பாளையத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பெயிண்டரான உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி மற்றும் மீனா அவர்களின் மகள் ஷாலினியை காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து ஷாலினி கர்ப்பமானநிலையில், ராஜேந்திரன் வேலைக்கு செல்லாமலும், தனது மனைவியை கவனிக்காமலும் இருந்துள்ளார்.இந்நிலையில் ஷாலினி தாய் மீனாவுடன், தனது சகோதரி வீட்டுக்கு, சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு அங்கு சென்ற ராஜேந்திரன், தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில், சரியாக வேலைக்கு செல்லாதவனுடன் என் மகளை அனுப்ப மாட்டேன் என்று கூறி தாய் மீனா, ஷாலினியை அவருடன் அனுப்ப மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன்,மாமியாரின் கன்னத்தில் கடுமையாக அறைந்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த மாமனார் தங்கமணி கோபத்தில் மருமகனை துரத்தி சென்று, தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சரிந்து விழுந்த ராஜேந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜேந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனார் தங்கமணியை தேடி வருகின்றனர். மேலும் மாமியார் மீனாவும் தலைமறைவாகியுள்ளார்.
இந்லையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.