சுழட்டி அடிக்க போகும் சூறாவளி.. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

சுழட்டி அடிக்க போகும் சூறாவளி.. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..



Expected rain in 17 District today

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கடும் என்பதால் மீனவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

17 districtமேலும் தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.