ஜிம்மில் உடற்பயிற்சி.. மாரடைப்பு ஏற்பட்டு பயிற்சியாளர் மரணம்.. அடுத்தடுத்து நிகழும் சம்பவம்..!



exercising-in-the-gym-the-trainer-died-of-a-heart-attac

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ். இவர் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக யோகேஷ் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இவ்வாறாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு குளித்துவிட்டு வருகிறேன் என்று கூறி குளியல் அறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் யோகேஸ் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது யோகேஷ் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

Gym trainer

இதனையடுத்து யோகேஷை மீட்டு உடனடியாக சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு யோகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு யோகேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உடற்பயிற்சி செய்த பயிற்சியாளர் ஜிம்மிலே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.