சமூகநீதியின் நாயகன் ஈ.வே இராமசாமி என்ற பெரியார் நினைவு தினம் இன்று.!

சமூகநீதியின் நாயகன் ஈ.வே இராமசாமி என்ற பெரியார் நினைவு தினம் இன்று.!



EV Ramasamy Periyar Memorial Day Today 

 

பெண்விடுதலை, சமூக நீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட பல்வேறு விஷயங்களுக்காக போராடி தனது வாழ்நாட்களை அர்ப்பணித்தவர் ஈ.வே இராமசாமி என்ற பெரியார்.  

கடந்த செப்டம்பர் 17, 1879ல் ஈரோட்டில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெரியார், மக்களிடம் நீங்காத கரையாக காணப்பட்ட மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். 

சமூகத்தில் அனைத்து சமுதாயமும் சாதி-மத கருத்துக்களை களைந்து ஒற்றுமையாக வாழவும், மூடநம்பிக்கையை ஒழிக்கவும் பல்வேறு மாநாடுகளை இவர் நடத்தி இருக்கிறார். 

தமிழ் சமூக மக்களின் சிறந்த வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விஷயங்களை கடைபிடிக்க, அவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் பெரியாரின் நினைவு நாள் இன்று. 

அவர் இதே நாளில் கடந்த 1973ம் ஆண்டு தனது 94 வயதில் மறைந்தார். இன்றோடு அவர் மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று சுதந்திரத்திற்கு பின்னர் நாம் அனுபவிக்கும் பல்வேறு சுயமரியாதை விஷயங்களுக்கு பெரியாரின் விதை அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.