என்ஜினீயரின் செல்போனில் குவிந்து கிடந்த ஐ.டி. பெண்களின் ஆபாச படங்கள்..! பல கோணங்களில் எடுக்கப்பட்ட கிளிக்ஸ்.!

என்ஜினீயரின் செல்போனில் குவிந்து கிடந்த ஐ.டி. பெண்களின் ஆபாச படங்கள்..! பல கோணங்களில் எடுக்கப்பட்ட கிளிக்ஸ்.!



engineer-arrested-for-morphing-working-women

சென்னை, போரூர்  ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவரின் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டது. இதில் அந்த பெண் அனுப்புவது போலவே ஆபாசமான மெசேஜ்களை இளைஞர்களுக்கு அனுப்பி வந்துள்ளனர். 

மேலும் அந்த பெண்ணின் பிறந்தநாள் அன்று அவர் தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இது பற்றி தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

இந்த நிலையில் அந்த இளம் பெண் வேலை செய்து கொண்டு வரும் அதே ஐடி நிறுவனத்தில் தமிழ்மாறன் என்னும் என்ஜினியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் தான் இந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, மெசேஜில் சேட் செய்தும் பேஸ்புக்கில் பதிவு செய்து வந்துள்ளார். 

chennai

பின்னர் உடனே தமிழ் மாறனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். அந்த செல்போனை ஆராய்ந்ததில் 100க்கும் மேற்பட்ட ஐ.டி. பெண் பணியாளர்களின் ஆபாச புகைப்படங்கள் அதில் நிறைந்திருந்தது.

இந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை போலவே ஏராளமான பெண்களின் படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அவரது போலியான அக்கவுண்டில் பதிவு செய்தோம், மெசேஜில் சேட் செய்தோம் வந்துள்ளார்.

இரவு நேரங்களில் ஆண்களுடன் செக்ஸ் சாட்டிங் செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசையில் இவ்வாறு செய்து ரசித்து இருக்கிறார். இவரது இந்த விபரீத ஆசையால் தற்போது காவல்துறையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

chennai

தமிழ்மாறன் அவர் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு தெரியாமலே பல கோணங்களில் ஆபாசமாக படம் எடுத்து வைத்திருந்திருக்கிறார். மேலும் இவர் ஆபாச சாட்டிங் மூலம் பணம் பரித்துள்ளாரா? இல்லை அவருடன் பணியாற்றும் பெண்களை மிரட்டி உள்ளாரா? என்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.