கஞ்சா போதையில் தகராறு.. தாயை அடித்துக் கொன்று வீட்டிலேயே புதைத்த மகன்.!

கஞ்சா போதையில் தகராறு.. தாயை அடித்துக் கொன்று வீட்டிலேயே புதைத்த மகன்.!



Drunken son killed mother in thittakudi

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சேவாக் படிக்காமல் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்தவர் அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. இதில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சேவா வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து கொண்டுள்ளார். 

Thittakudi

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா போதையில் இருந்த ஷேவாக் தனது தாயாரிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் தனது தாயை கட்டையால் கொடூரமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உறவினர்கள் கஸ்தூரியை தேடிப் பார்த்தபோது எங்கேயும் காணாததால், அவரது மூத்த மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனிடையே சேவாக் தனது சகோதரியிடம் புகார் கொடுக்க வேண்டாம் என வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Thittakudi

அப்போது அம்மாவைக் கொன்று புதைத்ததை சேவாக் தனது சகோதரியிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சேவாக்கின் சகோதரி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சேவாக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.