மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி! இதுவரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 19 பேர் பாதிப்பு!

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி! இதுவரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 19 பேர் பாதிப்பு!


dmk mla affected by corona


உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

corona

கொரோனாவால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலையில் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.   கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.