டிரெஸ்லாம் இரத்தம்.. யுகேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர்..!

டிரெஸ்லாம் இரத்தம்.. யுகேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர்..!



DMK councilor sexually harassed a girl studying at UKG

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டுகாலனி பகுதியைச் சார்ந்தவர் பக்கிரி சாமி. இவர் விருத்தாச்சலம் நகராட்சி திமுக 30-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

தற்போது விருதாச்சலம் மழலையர் தொடக்கப்பள்ளி நடத்திவரும் நிலையில், அங்கு 150-க்கு மேற்பட்ட மாணவி, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் யுகேஜி பயின்றவரும் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற நிலையில், சிறுமியின் உடையில் ரத்தக்கரைகள் இருந்துள்ளன. 

இதனை கண்டு அதிர்ந்த பெற்றோர் விசாரிக்கையில் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக சிறுமி கூறியுள்ளார். அவரை விருத்தாச்சலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்த பெற்றோர் அங்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

DMK councilor

அந்தப் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், யார் சிறுமிக்கு பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்தது? என்ற விசாரணை நடந்துள்ளது. அப்போது பள்ளியின் தாளாளர் பக்கிரி சாமியின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவர் திமுகவில் பொறுப்பில் இருந்து வந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அவரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவித்துள்ளார்.