பிரியாணி கடையை தொடர்ந்து செல்போன் கடையில் அட்டூழியம், திமுகவின் சாகசம் .!

பிரியாணி கடையை தொடர்ந்து செல்போன் கடையில் அட்டூழியம், திமுகவின் சாகசம் .!



dmk atrocities in mobile shop

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றிய திமுக  மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரகுபதி மாசிலாமணி மற்றும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து நேற்று முன் தினம் இரவு சுமார் 8 மணியளவில் தானிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான "கிளாசிக் மொபைல்" என்ற கடையில் மொபைல் பழுதுபார்க்க வந்து உள்ளனர் . அவர்கள் வந்து ஆரம்பம் முதலே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரும் அந்த கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கடுமையாக தாக்கி உள்ளனர் . 
இதில் பலத்த காயம் அடைந்த கடையின் உரிமையாளர் மணிவண்ணன் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.