10 வயது சிறுமி மனைவியின் துணையுடன் பலாத்காரம், கொலை.. உடலில் சூடுவைத்து சித்ரவதை.. குழந்தையில்லாத தம்பதி விபரீதம்.. திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!

10 வயது சிறுமி மனைவியின் துணையுடன் பலாத்காரம், கொலை.. உடலில் சூடுவைத்து சித்ரவதை.. குழந்தையில்லாத தம்பதி விபரீதம்.. திண்டுக்கல்லில் பேரதிர்ச்சி.!



Dindigul Vada Madurai Couple Sexual Abuse Killed

 

தன்னுடன் பாசமாக இருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து தம்பதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. சிறுமிக்கு செல்போன் காண்பித்து ஆசையாக பெற்றோரிடம் பேசி குழந்தையில்லாத கேடுகெட்ட தம்பதி நடத்திய அதிரவைக்கும் செயல் ஒவ்வொரு பெற்றோரையும் பதற வைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, செங்குளத்துப்பட்டியில் வசித்து வருபவர் ராஜேஷ் குமார். இவரின் மனைவி கீர்த்திகா. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது வரை குழந்தை இல்லை. இவர்களின் உறவினர் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். அவரின் வீட்டிற்கு தம்பதி சென்றபோது, அவர்களுடன் பாசமாக விளையாடிய உறவினரின் 10 வயது பெண் குழந்தையை தங்களுடன் வடமதுரைக்கு அழைத்து செல்ல கோரிக்கை வைத்துள்ளனர். 

குழந்தை இல்லாத தம்பதியான கீர்த்திகா - ராஜேஷ் குமார் அன்புடன் கேட்டுக்கொண்டதால், தனது மகளும் பாசமாக விளையாடுகிறாளே என சிறுமியின் தாயும் தனது ஒரேமகளை அவர்களுடன் அனுப்பி வைத்து இருக்கிறார். குழந்தையுடன் 10 நாட்களுக்கு முன்பு வடமதுரை வந்தவர்கள், சிறுமியின் உடலெல்லாம் பலமுறை சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கீர்த்திகா அழைத்து சென்றுள்ளார். 

Dindigul

அங்கு மருத்துவர்களிடம் குழந்தை வீட்டில் தவறி விழுந்துவிட்டது என கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து சிறுமியின் தாயாருக்கும் அதே தகவலை தெரிவித்து மருத்துவமனைக்கு வர சொல்லியுள்ளனர். சிறுமிக்கு சிகிச்சை அளிக்க தொடங்கிய மருத்துவர்கள், சிறுமியின் உடலில் ஆங்காங்கே சூடு இருப்பதையும், பிறப்புறுப்பில் கடுமையான அளவு சூடு வைக்கப்பட்டு காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போதே சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பேரதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, காமுகன் ராஜேஷ் குமார் செல்போனில் விளையாட்டு காண்பிப்பது போல சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். 

Dindigul

இதனை வெளியே கூறக்கூடாது என உடலில் சூடுவைத்து கொடுமை செய்துள்ளான். சம்பவத்தன்று சிறுமியிடம் கொடூரத்தனமாக அத்துமீறி நடந்த கயவனின் செயல்பாடுகளால் அவர் மயங்கியிருக்கிறார். இதனால் சிறுமி இறந்துவிட்டதாக எண்ணி, மருத்துவமனையில் வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி அனுமதி செய்துள்ளனர் என்பது அம்பலமானது. கணவன் சிறுமியை பலாத்காரம் செய்ய மனைவி கீர்த்திகாவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற பதறவைக்கும் உண்மையும் அம்பலமானது. 

விசாரணைக்கு பின்னர் கொடூரமான தம்பதியான ராஜேஷ் குமார் - கீர்த்திகா ஆகியோரை கைது செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.