இன்பமான வாழ்வில் எமனான மதுப்பழக்கம்.. தாய் கொலை., தந்தை கைது.. அனாதையாக தவிக்கும் 3 பெண் குழந்தைகள்.!

இன்பமான வாழ்வில் எமனான மதுப்பழக்கம்.. தாய் கொலை., தந்தை கைது.. அனாதையாக தவிக்கும் 3 பெண் குழந்தைகள்.!



dindigul-man-murder-his-wife

மது என்னும் அரக்கனால் பல துயரங்கள் நடந்துள்ள நிலையில், தாயை இழந்து தந்தையை பிரிந்து வாழும் நிலைக்கு 3 பெண் பிள்ளைகள் தள்ளப்பட்டுள்ளனர். இன்பமாக சென்ற வாழ்வில் எமனாக வந்த மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, ரெட்டியபட்டி லக்கான் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி (வயது 39). இவர் டெய்லர் கடைவைத்து நடத்தி வருகிறார். கருப்பசாமியின் மனைவி கற்பகம் (வயது 30). இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். மதுபான பழக்கத்திற்கு கருப்பசாமி அடிமையாக இருந்த நிலையி, அதனை மறக்க கோவிலுக்கு சென்று கையில் கயிறுகட்டி விரதம் இருக்க குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். 

குடும்பத்தினரின் அறிவுரையை ஏற்று கோவிலுக்கு சென்று வந்த பின்னரும் கருப்பசாமி சில நாட்களுக்கே மதுபானத்தை கைவிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கருப்பசாமி மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வரவே, கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

Dindigul

தகராறில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கருப்பசாமி கத்தரிக்கோலால் மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் கற்பகம் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வடமதுரை காவல் துறையினர் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரத்தில் தாய் உயிரிழந்து, தந்தை கைதாகிவிட 3 மகள்களும் பெற்றோரை எண்ணி தனிமையில் வாடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.