ஒரு நொடியில் பிரிந்த உயிர்..! டிரான்ஸ்பார்மர் கம்பியை பிடித்து தற்கொலை..! கொரோனா பீதியால் 55 வயது நபர் தற்கொலை.!
ஒரு நொடியில் பிரிந்த உயிர்..! டிரான்ஸ்பார்மர் கம்பியை பிடித்து தற்கொலை..! கொரோனா பீதியால் 55 வயது நபர் தற்கொலை.!
கொரோனா அச்சம் மற்றும் மனஅழுத்தம் காரணமாக 55 வயது நபர் ஒருவர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ளது மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி(55) என்பவர் அந்த பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்து நடத்திவந்துள்ளார். இந்நிலையியல் அழகர்சாமி கடந்த 10 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்படுவந்துள்ளார்.
ஒருவேளை கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில்அழகர்சாமி திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. ஆனாலும் அவருக்கு காய்ச்சல் விடவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அழகர்சாமி தனக்கு கொரோனா இருக்குமோ என கவலையில் இருந்துள்ளார்.
கவலை மனஅழுத்தமாக மாறிதை அடுத்து அழகர்சாமி நேற்று திண்டுக்கல் கல்லறை மேடு அருகேயுள்ள மின்மாற்றியில் ஏறி, அதில் இருந்த மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.