திருமணத்திற்கு முதல் நாள் மட்டையான மணமகன்.. சரமாரி கேள்வியோடு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.!

திருமணத்திற்கு முதல் நாள் மட்டையான மணமகன்.. சரமாரி கேள்வியோடு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.!


Dharmapuri Groom Weds Tiruvannamalai Bride Groom Alcoholic Woman Stops Marriage

முழுகுடிகாரன் போல திருமணத்திற்கு முதல் நாள் மதுபானம் அருந்தி மட்டையான மாப்பிள்ளைக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்த மணப்பெண், திருமணத்தை நிறுத்திவிட்டு தனது உறவினர்களுடன் இல்லத்திற்கு சென்றார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சார்ந்தவர் சரவணன் (வயது 32). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தினை சார்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டது. 

திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வஜ்ஜிரப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலில் வைத்து, நேற்று காலை 6 மணியளவில் நடைபெறவிருந்தது. மணப்பெண் தன்னை அலங்கரித்து குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் இரவு ஈஸ்வரன் கோவிலுக்கு வந்துள்ளார். 

Dharmapuri

அங்கு மணமகன் வீட்டார் யாரும் வராத நிலையில், உடனடியாக மாப்பிள்ளை வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு, மணமகன் மிதமிஞ்சிய போதையில் அரைமயக்கத்தில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணோ, எனக்கு மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என கூறி கழுத்தில் இருந்த மாலையை தூக்கி வீசி திருமணத்தை நிறுத்தினார். 

இதனால் அப்பகுதியே பரபரப்பான சூழலில் ஆட்கொள்ள, மணமகன் வீட்டார் மணப்பெண் மற்றும் மணப்பெண் வீட்டாரிடம் சமரசம் பேசியுள்ளனர். மணமகளோ உச்சகட்ட கோபத்தில் திருமணத்திற்கு முன்னரே இவ்வாறு குடித்து போதையில் இருப்பவர், திருமணத்திற்கு பின்னர் எனது வாழ்க்கையை நாசம் செய்திடுவார் என்று கூறியவாறே கதறியழுதார். 

Dharmapuri

நிலைமையை உணர்ந்துகொண்ட மணப்பெண் வீட்டினர், மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு ஆகியுள்ள செலவை மணமகன் வீட்டாரிடம் வாங்கித்தரவும் புகாரில் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சரவணன் மற்றும் அவரின் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தினர். 

போதை தெளிந்த சரவணனோ, இனிமேல் குடிக்கமாட்டேன். பெண்ணையே திருமணம் செய்கிறேன் என்று காவல் அதிகாரிகளிடம் தெரிவிக்க, அதற்கு பெண் சம்மதம் தெரிவித்தால் பிரச்சனை இல்லை. பேசி பாருங்கள் என்று பெண்ணிடம் பேச அனுப்பி வைத்துள்ளனர். 

Dharmapuri

சரவணன் மணப்பெண்ணிடம் இனி நான் குடிக்கமாட்டேன் என்று கூற, அதனை கண்டுகொள்ளாத பெண்மணி, திருமணத்திற்கு முதல் நாளே இப்படி செய்தால் எந்த பெண் தான் ஏற்றுக்கொள்வார்? உங்களுக்கு ஒரு தங்கை இருந்து, அவருக்கு திருமண நாளில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் சமாதானம் பேசுவார்களா? என்ற கேள்வி எழுப்பி, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, பெண்மணி தனது உறவினருடன் திருவண்ணாமலைக்கே புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.