தமிழகமே அதிர்ச்சி..! மீண்டும் கொடூரம்., 4 வயது சிறுவன் கொலை., பக்கத்துவீட்டு இளம்பெண் கைது.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!

தமிழகமே அதிர்ச்சி..! மீண்டும் கொடூரம்., 4 வயது சிறுவன் கொலை., பக்கத்துவீட்டு இளம்பெண் கைது.. கடலூரில் பரபரப்பு சம்பவம்.!



Cuddalore Muthandikuppam Keelakollai Village 4 Aged Child Boy Murder by Neighborhood Young Lady

4 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், சிறுவனை அடித்து கொலை செய்ததாக பக்கத்து வீட்டு இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிக்குப்பம், கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரின் மகன் அஸ்வந்த் (வயது 4). சிறுவன் கீழக்கொல்லை கிராமத்தில் உள்ள கோவில் தெருவில் விளையாட, நேற்று முன்தினம் 3 மணியளவில் சென்றுள்ளார். பின்னர், சிறுவன் திடீரென மாயமான நிலையில், பெற்றோர்கள் அருகில் இருக்கும் இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. 

இதனால் மகனை கண்டறிந்து தரக்கூறி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவன் அஸ்வந்த் முந்திரி தோப்பு பகுதியில் உடலில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். பேரதிர்ச்சிக்கு உள்ளாகிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், குற்றவாளியை கைது செய்ய கூறி சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் செய்தனர். 

Cuddalore

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை செய்கையில், சிறுவனின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த ரஞ்சிதா (வயது 21) என்ற பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்துள்ளது.

விசாரணையில், விளையாடிக்கொண்டு இருந்த சிறுவனை ரஞ்சிதா அழைத்து சென்றது உறுதியாகவே, அவரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.