உடற்பயிற்சி செய்யும்போது மருத்துவர் மாரடைப்பால் மரணம்..! கண்களை தானம் செய்த பெற்றோர்..!!

உடற்பயிற்சி செய்யும்போது மருத்துவர் மாரடைப்பால் மரணம்..! கண்களை தானம் செய்த பெற்றோர்..!!



Cuddalore Kurinjipadi Eye Donation by Young Doctor Died Heart Attack 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆபத்தானபுரம் கிராமம் ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் சீனுவாசன். இவரின் மகன் ஸ்ரீமன்சரத்.

இவர் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயின்றுவிட்டு, பயிற்சி மருத்துவராக வேலைபார்த்து வருகிறார். 

Latest news

நேற்று காலை நேரத்தில் அவரின் வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரின் கண்களை தனமாக வழங்க பெற்றோர் முன்வந்ததை தொடர்ந்து, கடலூர் அரசு மருத்துவக்குழுவினர் பயிற்சி மருத்துவரின் கண்களை தனமாக பெற்று சென்றனர்.