கோவையில் திருநங்கை மர்மமான முறையில் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் திருநங்கை மர்மமான முறையில் மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!



Covai transgender murder

கோவை அருகே திருநங்கை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்ற சோமசுந்தரம் ஒரு திருநங்கையாவார். இவர் வடவள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

Covai

மேலும் மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூன்று திருநங்கைகளும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமி மதியம் மாசிலாமணி வீட்டிற்கு வந்துள்ளார்.

இதில், மூவரும் வீட்டில் இருந்த நிலையில், மாசிலாமணி மற்றும் மணி இருவரும் மாலை 4 மணியளவில் வெளியே சென்றுள்ளனர். அதன் பின்னர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

Covai

இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். கொலைக்கான காரணம் ஏதேனும் உள்ளதா எனவும் அருகில் இருந்தவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.