கோவையில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஈஷா ஆதியோகி சிலை?! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!



Covai Adhiyogi Statue build without approvals

கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா பவுண்டேசனில் கட்டப்பட்டிருக்கும் ஆதியோகி சிலைக்கும் அதனை சுற்றி அமைந்துள்ள கட்டடங்களுக்கும் எந்தவித முன் அனுமதியும், தடையில்லா சான்றும் பெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.

இந்த தகவலை தொடர்ந்து, ஆவணங்களை ஆய்வு செய்து, அனுமதி பெற்றிருக்காவிட்டால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.