சிறைக்குள் சிக்கி தவிக்கும் அபிராமி!. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிறைக்குள் சிக்கி தவிக்கும் அபிராமி!. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!



court not accept Abirami bail


சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது.

kundrathur abirami

இதனையடுத்து போலீஸார் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் அபிராமி 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனையடுத்து அபிராமி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அவர்க்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.