மளிகை கடைக்காரர் காணாமல் போன வழக்கு; கள்ளக்காதலன் கொலை செய்ததை மறைத்த மனைவி: இருவருக்கும் விலங்கு பூட்டிய போலீஸ்..!



counterfeit-engineer-arrested-along-with-his-wife-in-gr

மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் அவரது மனைவியுடன் கள்ளக்காதலரான என்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் சந்தோஷ் குமார் (34). இவரது மனைவி வசந்தகுமாரி (27.) சந்தோஷ் குமாரும், வசந்தகுமாரியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ்குமார் கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்றங்கரையில் உடல் கருகிய நிலையில் சந்தோஷ்குமார் கிடப்பதாக காவல்துறைனருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் சந்தோஷ்குமாரை மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து இருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கள்ளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியரான முருகன் 27 என்பவருக்கும் சந்தோஷ்குமாரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து முருகனை பிடித்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர், கடந்த ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு வசந்தகுமாரியை சந்தோஷ் குமார் அழைத்து சென்றார் சென்றுள்ளார். பின்னர் கருக்கலைப்பு முடிந்தவுடன், தனது மனைவியை வாடகை காரில் அழைத்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த காரை ஓட்டி வந்த இன்ஜினியர் முருகன் என்பவருடன் உத்தகுமாரிக்கு வசந்தகுமாரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இதன் பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர் இவர்களது கள்ளத்தொடர்பை அறிந்த சந்தோஷ் குமார் இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி ஆதார் கார்டில் முகவரி திருத்தம் செய்வதற்காக சந்தோஷ் குமார் கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். இதற்கிடையே முருகனை தொடர்பு கொண்ட வசந்தகுமாரி, தன்னுடைய கணவனுக்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி முருகன் சந்தோஷ் குமாருக்கு உதவி செய்துள்ளார்.

இதன் பின்னர் இருவரும் முருகன் வசித்து வரும் வாடகை வீட்டிற்கு சென்றுள்ளனர்.  அங்கு இருவரும் பீர் அருந்தி உள்ளனர். அப்போது தனது மனைவியுடன் உள்ள கள்ள உறவை கைவிடுமாறு சந்தோஷ் குமார் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி தகராறாறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த முருகன் பீர் பாட்டிலால் சந்தோஷ்குமாரை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கில் கட்டி, மினி லாரியில் ஏற்றி சென்று கெடிலம் ஆற்றங்கரையில் வீசியுள்ளார். இதன் பின்னர் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது கள்ளக்காதலி வசந்த குமாரியிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.