தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா உறுதி! அசுர வேகத்தில் உயரும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா உறுதி! அசுர வேகத்தில் உயரும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை!


corono-affected-people-counts-in-tamilnadu

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த கொடிய வைரசால் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

tamilnadu

இந்நிலையில் தமிழகத்தில் இன்று  கொரோனா தொற்று 98 பேருக்கு உறுதிசெய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 58  பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.