இன்றும் பாதிப்பை விட அதிகரித்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..! இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
இன்றும் பாதிப்பை விட அதிகரித்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை..! இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 107 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து என்ற நிலவரம், பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவாக சென்னையில் 1,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 107 பேர் (அரசு மருத்துவமனை - 65, தனியார் மருத்துவமனை - 42) கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனைமூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சற்று ஆறுதலாக 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள்நீ மொத்த எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய தேதியில் 52,128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.