BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
உங்களுக்கும் 2 ஆயிரம் நிதி உண்டு!! தமிழக அரசு அறிவித்த அதிரடி திட்டம்!! மகிழ்ச்சியில் மக்கள்!!
புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தநிலையில், ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி வாங்கும் அட்டை தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கையெடுத்திட்டார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரிசி பெரும் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதிய குடும்ப அரட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என நேற்று அரசு அறிவித்திருந்தது
இந்நிலையியல் புதிய குடும்ப அரட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை தமிழக அரசு இன்று வெளியீடப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக குடும்ப அட்டை வாங்கியவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.