மகிழ்ச்சியான செய்தி..! கருணை காட்டிய கொரோனா.! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
மகிழ்ச்சியான செய்தி..! கருணை காட்டிய கொரோனா.! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,896ஆக குறைந்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,667 ஆக உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896 பேருக்கு கொரோனா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 1,916 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று பாதிப்பு 1,896ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 216 ஆக கு குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் மேலும் 23 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,519 ஆக உயர்ந்துள்ளது.