ஒரே நாளில் கொத்து கொத்தாக குணமடையும் கொரோனா நோயாளிகள்..! இன்றைய பாதிப்பு மற்றும் டிஸ்சார்ஜ் நிலவரம்.!

ஒரே நாளில் கொத்து கொத்தாக குணமடையும் கொரோனா நோயாளிகள்..! இன்றைய பாதிப்பு மற்றும் டிஸ்சார்ஜ் நிலவரம்.!



Corona latest update in Tamil Nadu and Chennai

தமிழகத்தில் இன்று மேலும் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட நிலவரம், பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அன்றாடம் வெளியிட்டுவருகிறது.  அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில் இன்று புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,55,449-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 116 பேர் கூர்நாவள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சற்று ஆறுதலாக இன்று ஒரே நாளில் 6,384 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,96,171- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53,155- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.