தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சம்.! கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சம்.! கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?


corona-increased-in-tamilnadu-LKBJ9P

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இரண்டாவது அலையில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 10,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

corona

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,250 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் தற்போது 79,804 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.