தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! இன்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?



Corona increased in tamilnadu

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வந்தநிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்றுமட்டும் புதிதாக 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.

corona

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளநிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து  5,764- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.