மக்களே யாரும் வெளியில் வராதீங்க.! இன்று ஒரே நாளில் மட்டும் எவ்வளவு உயிர் பலி தெரியுமா.?

மக்களே யாரும் வெளியில் வராதீங்க.! இன்று ஒரே நாளில் மட்டும் எவ்வளவு உயிர் பலி தெரியுமா.?


corona increased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், கடந்த 10-ந்தேதி முதல் வரும் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனாவால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 5,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக, கோவை மாவட்டத்தில் 3,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronaதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 448 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.