தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் மத்திய அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவவில்லை. தமிழகத்திலும் சமீப காலமாகவே கொரோனா பரவல் குறைத்துக்கொண்டு வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடந்த 24
மணி நேரத்தில் தமிழகத்தில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,26,261 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 7 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,222 ஆக உயர்ந்துள்ளது.