தமிழகத்தில் இன்றுமட்டும் கொரோனாவுக்கு இத்தனை பேர் பாதிப்பா..? பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் இன்றுமட்டும் கொரோனாவுக்கு இத்தனை பேர் பாதிப்பா..? பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக சென்னையில் இன்று 1285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,173 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 87 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,137 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 2,712 பேர் உயிரிழந்துள்ளனர்.