தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் மட்டும் எவ்வளவு?

தமிழகத்தில் நேற்று 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,545-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அசுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த நான்காவது கட்டமாக இந்த மாதம் இறுதிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவலின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் தமிழகத்தில் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 558 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 12,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.