தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்கின்றதா.? கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்கின்றதா.? கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா.?
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
தமிழகத்திலும் கோரினா பரவல் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா அதிகமாக பரவி வரும் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52,746 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. கொரோனாவால் நேற்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 12,488 ஆக உயர்ந்துள்ளது.